![]() |
அங்காடித் தெரு |
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ உன் அன்பில் கண்ணீர் துளியாவேன் நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் (உன் பேரை..) நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் என் உலகம் தனிமை காடு நீ வந்தாய் பூக்கள் நூறு உனை தொடரும் பறவைகள் நூறு பெண்ணே பெண்ணே (நீ இல்லையென்றால்..) (உன் பேரை..) உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும் உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதில் தாண்டி ஒன்றும் இல்லை பெண்ணே பெண்ணே (நீ இல்லையென்றால்..) (உன் பேரை..) அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை (அவள்..) அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை (அவள்..) அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை நான் காவலிருந்தால் தடுக்கவில்லை அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை நான் பொம்மை போலே பிறக்கவில்லை அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை அவள் சொந்தமின்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை (அவள்..) அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை அந்த அக்கரைப்போல வேறு இல்லை அவள் வாசம் ரோஜா வாசமில்லை அவள் இல்லாமல் சுவாசமிலை அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை (அவள்..) எங்கே போவேனோ எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என் இதயத்தை வாங்கி விட்டாய் எங்கே போவேனோ என் கண்ணை கீறி விட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் கூண்டுக்குள் இருக்கும் பறவை நான் என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி (எங்கே போவேனோ..) தீராது வானின் வழி எதிர்க்காற்றில் போகும் கிளி இறை தேடி வாடும் வலி கூடென்று காட்டும் விழி பந்தாடுதே என்னை வாழ்தலின் நியாயங்கள் சம்பாரித்தே தீருமோ துணை போலத்தானா பெண்கள் வீசிடும் வார்த்தையும் வழிகின்றதே துக்கம் தான் நீ என்னை நீங்கிவிட்டாய் (எங்கே போவேனோ..) தெய்வங்கள் இங்கே இல்லை இருந்தாலும் இரக்கம் இல்லை கழுத்தோடு கல்லை கட்டி கடலோடு போட்டாள் என்னை மரணத்தை தானா இந்த காதலும் கேட்குது பொய் வேஷமே உள்ளதே எங்கும் இல்லாமை தானா இங்கு காதலை மாய்ப்பது என் சூழ்நிலை கொல்லுதே நீ என்னை நீங்கிவிட்டாய் (எங்கே போவேனோ..) கதைகளை பேசும் விழி அருகே கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே (கதைகளை..) ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் கால்கள் எங்கேயோ மிதக்கிறதே ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே (கதைகளை..) கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது வருகிற வாசனை நீயல்லவா உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை வெறும் கரையில் படுத்துக்கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமடா உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி (கதைகளை..) உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறதே உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே எந்தன் நாட்கள் விடிகிறதே ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம் ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம் நேற்றென்னும் சோகம் நெருப்பாய் வந்து தீ மூட்டும் இன்றென்னும் மழையில் அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே (கதைகளை..) கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா புல்லும் பூவும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழியில்லையா பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த பிழை இல்லையா இது மிக கொடுமை இளமையில் வறுமை பசிதான் மிகப்பெரும் மிருகம் அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா கண்ணீர் துளிகளின் ஆழம் அது கடலை விடவும் பெரிதில்லையா இது மாறுமா? எதையும் விற்கும் எந்திர உலகம் எல்லாம் இங்கே உண்டு மனிதம் மட்டும் தேடிப்பார்த்தும் எங்கும் இல்லை கண்ணும் காதும் கையும் காலும் இல்லா மனிதர் உண்டு வாயும் வயிறும் இல்லா மனிதர் எங்கும் இல்லை மனிதம் எங்கும் அன்பின் விதை அள்ளி தூவ கண் வேண்டும் வருங்காலத்தில் வறூமை இல்லா உலகம் வேண்டும் (புல்லும்..) |
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “அங்காடித் தெரு”
Post a Comment