ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
(ஏதோ..)

உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே
கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே
பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன்

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை
உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை
இதுவரை யாரிடமும் என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய் என்னிடத்தில் நானுமில்லை

என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை
உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை
எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவையில்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை
இதுவரை என் உயிராய் இப்படி நான் வாழ்ந்ததில்லை
புத்தம் புது தோற்றமிது வேரெதுவும் தோன்றவில்லை

நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில்லை
ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
(ஏதோ..)



ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரமிது
இதயமே ஓ இவளிடம்
உருகுதே ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே ஓ என்றாலும் ஓ
கேட்காதே ஓ..

என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையினில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வாழ்க்கை தெரிஎதும் தொலைத்து போகிறேன்
காதல் என்றால் ஓ பொல்லாதது
புரிகின்றது ஓ

கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரணன் நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழ்வேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
(ஒரு தேவதை..)


யாரை கேட்பது எங்கே போவது
ஓ ..ஓ ..ஓ ...ஓ ........


யாரை கேட்பது எங்கே போவது



தூண்டில் புழுவென ஆனாய்



ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது



நெஞ்சம் நொறுங்கி தான் போனாய்


நதியோடு பயணம் போனால்



அலை வந்து மோதுமே



அதை போல வாழ்கை கூட போராட்டமே


விதி என்னும் நூலில் ஆடும்



பொம்மை போல வாழ்கிறோம்



வழிதொரம் கானல் நீராய்


ஏமாற்றம் தோற்றம் காட்டும்



யாரை கேட்பது எங்கே போவது


தூண்டில் புழுவென ஆனாய்





ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது


நெஞ்சம் நொறுங்கி தான் போனாய்



ஓ ..ஓ ..ஓ


பனி புகை காற்றே தான் நெருப்பென்று தவறாக


பறவைகள் நியாநிதாலே வழி இல்லையே


துயரங்கள் எப்போதும் நிரந்தரம் கிடையாது


கிழக்கினில் விடிந்தாலே இருள் இல்லையே


அடை மழை அடித்தாலும்


மண் சாயும் மரம் சாயும்


மலை என்றும் சாயாதடா


இன்பம் மட்டுமே வாழ்கை இல்லையே


கொஞ்சம் துன்பமும் வேண்டும்


மழை துளியிலே வெயில் சேர்ந்த பின்


தானே வானவில் தோன்றும்



நதியோடு பயணம் போனால்



அலை வந்து மோதுமே



அதை போல வாழ்கை கூட போராட்டமே



விதி என்னும் நூலில் ஆடும்



பொம்மை போல வாழ்கிறோம்



விதி மாற்றும் விதிகள் செய்தால்


உன் வாழ்கை உந்தன் கையில்



இன்பம் மட்டுமே வாழ்கை இல்லையே


கொஞ்சம் துன்பமும் வேண்டும்


மழை துளியிலே வெயில் சேர்ந்த பின்


தானே வானவில் தோன்றும்





Comments :

0 comments to “வாமனன்”


Post a Comment