![]() |
| ஆட்டோகிராப் |
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.. (ஒவ்வொரு..) ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே.. நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்.. இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்.. மனமே ஓ மனமே நீ மாறிவிடு.. மலையோ.. அது பனியோ.. நீ மோதிவிடு.. உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள் காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்.. உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் யாருக்கில்லைப் போராட்டம்? கண்ணில் என்ன நீரோட்டம்? ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் (மனமே..) (ஒவ்வொரு..) வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம்.. இலட்சம் கனவு கண்ணோடு இலட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாரும் இல்லை உறுதியோடு போராடு.. மனிதா! உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும் அவமானம் படு தோல்வி எல்லாமே உரமாகும் தோல்வியின்றி வரலாறா துக்கம் என்ன என் தோழா ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்.. (மனமே..) (ஒவ்வொரு..) (மனமே..) கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி தனிமையில் இருந்தால் நினைவாய் இருப்பாய் அன்பு தோழி நான் இறந்தோ பிறந்தோ புதிதாய் ஆனேன் உன்னால் தோழி தோழி உந்தன் வருகையால் நெஞ்சம் தூய்மையாய் ஆனதடி நல்ல தோழி நல்ல நூலகம் உன்னால் புரிந்ததடி Well My Friend I have something to say I want you to listen Listen to me This is what I have to say Here It Goes.. தாகம் என்று சொல்கிறேன் மரக் கன்று ஒன்றாய் தருகிறதே பசிக்குது என்று சொல்கிறேன் நெல்மனி ஒன்றை தருகிறாய் உந்தன் கை விரல் பிடிக்கையில் புதிதாய் நம்பிக்கை பிறக்குது உந்தன் கூட நடக்கையில் ஒன்பதாம் திசையும் திறக்குது என் பயணத்தில் எல்லாம் நீ கைக்காட்டி மரமாய் முளைத்தாய் என் மனதை உழுது நீ நல்ல விதைகளை விதைத்தாய் என்னை நானே செதுக்க நீ உன்னையே உலியாய் தந்தாய் என் பலம் என்னவென்று எனக்கு நீ இன்றுதான் உணர வைத்தாய் (கிழக்கே..) மழையோ உந்தன் புன்னகை மனசெல்லாம் மெல்ல நனையுதே வேருக்குள் விழுந்த நீர் துளி பூவுக்கும் புத்துயிர் கொடுக்குதே உனக்குள் ஏற்ப்படும் உத்சவம் என்னையும் குதூகலப் படுத்துதே தோழி ஒருத்தி கிடைத்தால் இங்கு இன்னொரு பிறவி கிடைக்கும் இதுவரை இந்த உண்மை ஏன் தெரியவில்லை எவர்க்கும் மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை அதை உன்னால் உணர்ந்தேன் தோழி படைத்தவன் கேட்டால் கூட உன்னை கொடுத்திடமாட்டேன் தோழி (கிழக்கே..) மனமே நலமா? மனமே நலமா? உந்தன் மாற்றங்கள் நிஜமா? புது புது விதமா ஏதோ வந்ததே சுகமா? நீ சொல்லு நடந்தது என்ன? என்னை மாற்றி போனது என்ன? மனமே நலமா? உந்தன் மாற்றங்கள் நிஜமா? புது புது விதமா ஏதோ வந்ததே சுகமா? மனமே நலமா? உந்தன் மாற்றங்கள் நிஜமா? புது புது விதமா ஏதோ வந்ததே சுகமா? அவளை நான் கண்டுகொண்டேன் அங்கே நான் தொலைந்து போனேன்.. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே (ஞாபகம் வருதே..) ஏதோ ஒன்றை தொலைத்தது போலே ஏதோ மீண்டும் பிறந்தது போலே தாயே என்னை வளர்த்தது போலே கண்களின் ஓரம் கண்ணீர் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி முதல் முதல் திருடிய திருவிழா வாட்ச்சு முதல் முதல் குடித்த மலபார் பீடி முதல் முதல் சேர்த்த உண்டிய காசு முதல் முதல் பார்த்த டூரின் சினிமா முதல் முதல் ஜெயித்த சகுடு போட்டி முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு முதல் முதல் போன சிக்கு புக்கு ரயிலு முதல் முதல் அழுத சினேகிதன் மரணம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதலாக பழகிய நீச்சல் முதல் முதலாக ஓட்டிய சைக்கிள் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர் முதல் முதலாக அப்பா அடித்தது முதல் முதலாக சாமிக்கு பயந்தது முதல் முதலாக வானவில் ரசித்தது முதல் முதலாக அரும்பிய மீசை முதல் முதலாக விரும்பிய இதயம் முதல் முதலாக எழுதிய கடிதம் முதல் முதலாக வாங்கிய முத்தம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் உன் உருவம் கண்களில் பதிந்ததினால் கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன் தாய் தந்தைக்காக எனைப் பிரிய காதலை காகிதமாய் தூக்கி எரிய பெண்னே உன்னால் முதிகிறதே என்னால் ஏனோ முடியவில்லை எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை காரணம் கேட்டால் தெரியவில்லை (நினைவுகள்) காத்திருந்து காத்திருந்து பழகியவன் நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக காத்திருந்து காத்திருந்து பழகியவன் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன் நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை சுமந்து போக மறுக்கிறதே மொழிகள் எல்லாம் முடமாகி என் மெளனத்தைக் கூட எரிக்கிறதே சுவாசிக்க கூட முடியவில்லை எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை என்னை எனக்கே பிடிக்கவில்லை காரணம் கேட்டால் தெரியவில்லை (நினைவுகள்) |
Subscribe to:
Post Comments (Atom)



Comments :
0 comments to “ஆட்டோகிராப்”
Post a Comment