நந்தலாலா

கை வீசி நடக்கற காத்தே
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

அழகான கிளிக்குஞ்சே மெதுவா மெதுவா கிளையில் நடந்திடப் பழகு
சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிடப் பழகு
பழகப் பழக உலகம் முழுதும் சொந்தம் ஒன்னு உண்டாகும்
பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானம் இன்னும் பெரிதாகும்

மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம்தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே


விளையாடும் அணில் குஞ்சே அழகாய் முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு
உருட்டி உருட்டி அழகா அழகா கோலிக் குண்டு கண்ணாலே
துருவித் துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே

வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில்
உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கிடைச்ச குயில்களின் பாட்டை
உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே





மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
மெல்ல ஊஞ்சலாடி குலுங்கி குலுங்கி
அசைஞ்சு போகும் கோலம்
பிஞ்சு மனதுடன் ஹோய் பிள்ளைகள் போகுது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ

(மெல்ல ஊர்ந்து ஊர்ந்து)


வானம் ரொம்ப பழையது
மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே என்று பிறந்து வந்தது?
பாதை ரொம்ப நீண்டது
பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது
நீ செல்லும் முடிவைப் பொருத்தது

முதல்முறை போகும் பயணத்தின் இன்பம்
மறுபடி என்றும் திரும்பி வராது
தூரம் காட்டும் விளக்கொளி
காட்டிப் போகும் நம் வழி
நாளை காலைப் பொழுது காட்டும் நமக்கும் நல்வழி

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது


நாலு காலு ஆமைதான் நகர்ந்து போகுதே
தூரம் தாண்டாமலே துவண்டு நின்று தூங்குதே
நாலு அடிக்கு ஓரடி நின்று போகுதே
மேடுகள் கண்டால் இது பின்னோக்கி உருண்டு ஓடுதே
டபடப ஓசை தாளங்கள் போடும்
குபுகுபு என்று புகைவிட்டு பாடும்
பாட்டிக்கதையைப் போலவே பறக்கும் மாயக்கம்பளம்
தேடிப் பிடித்து எடுத்து வா நீ பறந்து போகலாம்


மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ



ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


யாரு இத கண்டு கொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு சொல்வார்?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..


உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆரோடுமே!
துன்பம் தீர்க்க நீயும் உன் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோ்ர்க்குமே!


கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம்ல்லவா!
ஏழைக்கென்று தந்தது எல்லாம்
ஈசன் கையில் சேரும் அல்லவா!

கண்கள் இல்லா மனிதருக்கு...
கால்கள் என நாம் நடந்தால்!!!
நம் பூமியில் அநாதையா? அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..

மண்ணில் தானே எல்லைக் கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால் தானா பிள்ளை பூமியில்?
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்!

நாதியற்ற பூவும் இல்லை
நட்டுவைத்ததால் வந்தது.
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னையின்றி யார் வந்தது?


எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அநாதையா?
அநாதையா?

ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே
அன்பு ஒண்ணுதான் அநாதையா..
அன்பு ஒண்ணுதான் அநாதையா..



Comments :

0 comments to “நந்தலாலா”


Post a Comment