அஞ்சாதே


கண்ணதாசன் காரைக்குடி
பெயரை சொல்லி ஊத்தி குடி
குன்னக்குடி மச்சான போல் பாட போறேன் டா
கண்ணாடி கோப்பையில் கண்ண மூடி நீச்சல் அடி
ஊறுகாய்யா தொட்டுக்கிட்டா ஒடி போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோசியலிசம் தான்

பொண்டாட்டி பிள்ளைங்க தொல்லைங்க
இல்லா இடம் இந்த இடம் தானே
இந்த இடம் இல்லையினா சாமி மடம் தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்கு பாரு புலம்புறார்
நூறு மில்லிய அடிச்சா போதை இல்லையே
நூறு தாண்டுனா நடக்க பாதை இல்லையே

அண்ணனும் தம்பியும் எல்லாரும்
இங்க வந்தா டப்பாங்குத்து தானே
ஒவரா ஆச்சுதுனா வெட்டுக்குத்து தானே
எங்களுக்கு தண்ணியில் கண்டம் இல்லை
எங்களுக்குள் சாதி மதம் இரண்டும் இல்லை
கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சு
ரோடுக்கு கடையில் மனுசன் ஜாலிய பாரு
சேட்டு கடையில் மனைவி தாலிய பாரு



மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
அழகானேன் புதிதாய் பிறந்தேன்
(மனசுக்குள்..)

இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்
(மனசுக்குள்..)

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்
பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
உன்னிடம் நான் பேபி என்பேன்
(மனசுக்குள்..)




கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை
கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை


கூந்தல் கூரையில் குடிசையை போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை


கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூதத் மேலாக்கு நீ
தள தளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவலவென பேசும் புல்லாக்கு நீ
ஐயாவே ஐயாவே அழகிய பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தகரிங்க

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கருகருவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண் கூசுதே
பகல் இரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோட கண் ஜடா இலவச மின்சாரம்
ஆண் கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை









Comments :

0 comments to “அஞ்சாதே”


Post a Comment