மச்சி மச்சி

மச்சி மச்சி
மொரைச்சிட்டான்டா
மடக்கி மடக்கி
அடிச்சிட்டான்டா
அண்ணாநகரு
டவரு நீடா
மல்லுக்கட்டி அடிடா
செக்கைப்போடு
போட்டுட்டான்டா
சைக்கிள் கேப்பில்
கவுத்துட்டான்டா
பார்ட்டி இப்போ
உனக்குத்தான்டா
டொம்முனு கட்டிப்புடிடா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

சூது வாது தெரியாது
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது
முகத்தை கழுவு லேசா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

பங்க் அடிச்சு தெரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சிக்குவோமே
சன் ரைசைப் பார்த்ததில்லை கண்ணின் மணி
எங்களுக்கு இயேர்லி மார்னிங் பத்து மணி
போடு….
லைட் ஹவுஸ் உயரத்தையும்
எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரிட்சையில் பதில் எழுத
பாதிப் பேப்பர்ல நொண்டும்
சுட்டாத்தான் நெருப்பு…
பட்டாத்தான் பொறுப்பு….

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைலை கொஞ்சம் மாத்தி

சூது வாது தெரியாது
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது
முகத்தை கழுவு லேசா

ஹா ஹா ஹ ஹா ஹா ஹா….

தண்டாலு தினம் எடுப்போமே
பஸ்க்கியும் தான் பல அடிப்போமே
அர்னால்ட போல ஏத்தி அம்சமா போவோம்…
ஏதாச்சும் சண்ட வந்தா ஆப்ஸன்டாவோம்…
இரவுண்டுக்கட்டி கெலப்புங்கடா
இரத்தம் சூடாக இருக்கு..
பவருக்கட்டி நொறுக்குங்கடா
பறக்க இறக்கைகள் எதுக்கு…
காத்தாடிப் போல…
போவோண்டா மேலே

ஏத்தி ஏத்தி ஏத்தி..
ப பா பா ப பா ப பா
மாத்தி மாத்தி மாத்தி …
ப பா பா ப பா ப பா

சூது வாது தெரியாது…
சொக்கத்தங்கம் இராஜா
சுத்தம் பக்கம் கிடையாது…
முகத்தை கழுவு லேசா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா

இராஜா நான் இராஜா
என் பேட்டைக்கென்றுமே இராஜா
இராஜா நான் இராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
இராஜா நான் இராஜா
உன் திமிருக்கு எடுப்பன்டா காஜா
இராஜா நான் இராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா



அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (2)

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
அவ வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காற்றில நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா!!
மொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!!
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (2)

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தன தானே
தன தன்னா தன்னே தானே




அடியே கொல்லுதே


அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே



இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போல துரத்துவதும் ஏனோ

முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்தது
உன் நேசம் என்றது

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளது
என்மீது பாய்ந்தது

மழைக்காலத்தில் சரியும்
மண் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக்
கண்டேனே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடந்தேனே

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொன்ன வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே

எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே ….




அனல் மேலே பனித்துளி


அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி....."

சரணம் -1

எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ..

ஒரு சிறு வலி இருந்ததுவே

இதயத்திலே இதயத்திலே..

உனதிரு விழி தடவியதால்

அழித்துவிட்டேன் மயக்கத்திலே..

உதிரட்டுமே உடலின் திரை

இதுதானே இனி நிலாவின் கறை கறை..

சரணம் -2

சந்தித்தோமே கனாக்களில்

சில முறையா பல முறையா!

அந்தி வானில் உலாவினோம்

அது உனக்கு நினைவில்லையா?

இரு கரைகளை உடைத்திடுவே

பெருகிடுமா கடலலையே

இரு இரு உயிர் தத்தளிக்கயில்

வழி சொல்லுமா கலங்கரையே

உனதலைகள் எனையடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட‌




நீ இன்றி நானும் இல்லை

நீ இன்றி நானும் இல்லை

என் காதல் பொய்யும் இல்லை

வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்


தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே


இனி உன்னை பிரிய மாட்டேன்
துளி தூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்க தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே


ஓஹ் ஷாந்தி ஷாந்தி ஓஹ் ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி ?
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி


நீ இன்றி நானும் இல்லை
ஏன் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும் நேரம் வருமா ?
இரு கண்கள் மோட்சம் பெரும ?


விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க


ஒ சாந்தி சாந்தி ஒ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உன்னை தேடி




முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
பல்லவி
========
சூர்யா: Hai Malini .. I am Krishnan..
நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
And I am in love with you...

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
(முன் தினம் பார்த்தேனே..)

சரணம் 1
========
ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
ஆ: oh my love
பெ: உன்னை நான் பாராமல்
ஆ: yes my love
பெ: எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========
பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..





நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)




Comments :

0 comments to “வாரணம் ஆயிரம்”


Post a Comment