அழகிய தமிழ் மகன்

மதுரைக்கு போகாதடி.
பெண்:
கற்பூர கண்ணிகையே வாராய் அடி
அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வங்காள மகாராணியே
வலது கால் எடுத்து வாராய் நீயே
நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வளமாக
சேர்ந்த இடம் சுகமாக
வாழ போற

ஆண்:
மதுரைக்கு போகாதடி.......
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்
தஞ்சாவூர் போகாதடி.......
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்
தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்னை சுத்தும்

அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா

பெண்:
கற்பூர கண்ணிகையே வாராய் அடி
அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்
நீ வங்காள மகாராணியே
வலது கால் எடுத்து வாராய் நீயே

ஆண்:
அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காத
அத்தான் மகன் வாரான்டி வெளுத்து போக.....
மதுரைக்கு போகாதடி...
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்

சித்திரையினா.....

பெண்:
வெயில் அடிக்கும்

ஆண்:
கார்த்திகையினா....

பெண்:
மழை அடிக்கும்

ஆண்:
அடல் குடல் தடால் படால் ஆம்பிளைதான்
தங்கம்

ஆடியினா....

பெண்:
காத்தடிக்கும்

ஆண்:
மார்கழினா.....

பெண்:
பனி அடிக்கும்

ஆண்:
தமால் டாமல் கமால் கமால் ஆம்பிளைதான்
சிங்கம்
ஓ...ஓஒ....மருதாணி தோட்டத்துக்கே அட
மருதாணி யாரு வச்சா
ஓ தேரா தேரா இவ வாரா வாரா

பெண்:
ஓஒ..... காட்டு குயிலு கட்டிக்கத்தான்
தமிழ் நாட்டு புயலும் வந்திருச்சே
ஒ ஓஒ ஜோரா ஜோரா வரும் வீரா வீரா

ஆண்:
நான் அக்கரையில் இருந்தாலும் இக்கரையில்
இருந்தாலும் சர்க்கரையாய் இருப்பாளே ஆசையிலே

மதுரைக்கு போகாதடி....
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா

பெண்:
மருமக மருமக வந்தாச்சம்மா
இனி மாமியாரு பதவிதான் உனக்காச்சம்மா
தமிழ் நாட்டு மன்மதனே வாராய்
பெண் மயங்க பெண் மயங்க
நடந்து நடந்து வாராய்
நீ எங்கேயோ மகராசனே....
வெற்றி மாலைக்கென பிறந்தவனே.....
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக...
சொன்னதெல்லாம் நிஜமாக.....
கன்னி நிலா வந்திருச்சு
கனவு காண

ஓ ஓ ஓ கெட்டி மேளம் நாதஸ்வரம் அது
சேர்ந்து கேட்கும் நேரம் சுகம்
டும் டும் டும்
டும் டும் டுடும் டும் டும் டும் டும்

ஆண்:
ஓ...மஞ்ச குங்குமகாரியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பிறப்பு

பெண்:
டும் டும் டும்

ஆண்:
டும் டும் டுடும் டும் டும் டும் டும்

பெண்:
ஓ ஓ.... சந்திரனில் ஒரு பாதி
இந்திரனில் ஒரு பாதி சுந்தரனே என் ஜோடி ஆனதம்மா

ஆண்:
மதுரைக்கு போகாதடி....
அங்க மல்லிகை பூ கண்ணை வைக்கும்

பெண்:
மதுரைக்கு போக மாட்டேன்
என் மல்லிகைபூ உன் கையில

ஆண்:
தஞ்சாவூர் போகாதடி....
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்

பெண்:
எங்கும் போக மாட்டேன்
உன் முன்னால தான் நிப்பேன்
முன்னால் வந்து நின்னு என் கண்ணால் சொக்க வைப்பேன்

ஆண்:
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா

பெண்:
அ ஹா அஹா

ஆண்:
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா

பெண்:
அ ஹா அஹா

ஆண்:
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
அசருதே அசருதே உன் பக்கமா
அது என்ன அது என்ன உன் குத்தமா
ஹே ஹேய் ஹே ஹேய்




நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா


வளையப்பட்டி தவிலே தவிலே
ஜுகல்பந்தி வைக்கும் மவளே மவளே
அடி ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்னை மயக்குறியே மயக்குறியே

நீ நாதஸ்வரம் போல வந்தா நாபிக்கமலம் நானா
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா எட்டாம் ஸ்வரம் நானா

(வளையப்பட்டி தவிலே)

உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்துபைரவி
நீ பார்க்கும்போது பாக்யஸ்ரீ
நீ கொஞ்சும்போது நீலாம்பரி

நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போடு பித்தேறி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

(வளையப்பட்டி தவிலே)


நீ பார்க்கும்போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா
பேசும் போதே ஜில்லுங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா

நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முருக்கேறுதே
ஏண்டி நீயும் மணப்பாறையா

நீ கைகால் முளைச்ச மத்தளமா
உன்னை வாசிக்கப் பின்னால் சுத்தனுமா
நீ ஆர்மோனிய கட்டையமா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா

நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தா ஒளியும் பூணையடா
நான் வயதுக்கு வந்த வயலினடா
என்னை மைனரைப் போல வாசியடா


(வளையப்பட்டி தவிலே)



கேளாமல் கையிலே வந்தாயே காதலே
Naan kelaamale nee en kaadhalaai en kaladiyil thavamirunthaai
kangalai moodi unnai mithithu sendruvitten
Indru thirumbi paarkiren , En izhappai unarnthu thudikkiren
En raaman un kaiyil naan anilaaka irukka ninaikkiren

கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ எழுதியது போலவே தோன்ற
கேளாமல் கையிலே வந்தாயே காதலே கேளாமல் காயிலே வந்தாயே காதலே
என் பேரை கூவிடும் உன் பெரும் கோகிலம்
கோகிலம் .. கோகிலம் .. கோகிலம் நெஞ்சிலே காதலின் கால் தடம்
கேளாமல் ...கையிலே.. வந்தாயே காதலே..
என் ராமன் ..நீ எனில் உன் கையில் நான் அணில்
இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்
மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன் மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
ஏதோ நடக்கின்றதே துணிந்து பாருங்களேன்
பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
பார்வை ஒன்றால் உன்னை அள்ளி என் கண்ணின் சிறையில் உன்னை அடைப்பேன்
அதில் நீ நிரந்தரமா நீ இருக்க இமைகள் வேண்டும் என்பேன்
மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ
தூங்கும் தேவை எதும் இன்றி கனவுகளும் கைகளில



உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போல ஓடிக்கொண்டிறு
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே
(எல்லா புகழும்..)
ஒஹோ தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும்
தளதளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே நீதானே
ஆ ஆ ....
(எல்லா புகழும்..)

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே
நீ இன்றை இழக்காதே ..நீ இன்றை இழக்காதே
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும்
அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே
நேற்று நடந்த காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா
ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ விட்டுச் செல்
ஹே ..தோழா முன்னால் வாடா
உன்னால் முடியும்
தளதளபதி தளபதி நீதான் நீதான்
அன்புத் தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே
ஏய் ...
(எல்லா புகழும்..)
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாட ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..

மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை
கடல் போல் , மலை போல், காற்றை போல் , பூமி போல்
நீ பெருமை சேரடா
பிறந்தோம் இருந்தோம் சென்றோம்
என்ற வாழ்வை தூக்கிப் போடடா
மாணவன் மனது வைத்தால்
(எல்லா புகழும்..)
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் . .
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே ..
மாணவன் மனது வைத்தால் ..



நீ நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா
குழு: பூம் பூம் சக்க பூம் பூம் சக்க பூம் பூம் சக்க
ஆண்: ஹேய் பேபி என் ஆல்பம் நீ
ஹேய் பேபி உன் DJ நான்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டிடும் சங்கீதம்
ஹேய் பேபி என் ஆல்பம் நீ
ஹேய் பேபி உன் DJ நான்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டிடும் சங்கீதம்
நீ நீ நீ மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வர்றியா
நீ மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட் ஆக வர்றியா

பெண்: ஹேய் ராக் இன் ரோலில் கில்லாடி
ராப் ஸாங் எவ்ரிடே முன்னோடி
சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா
ஹேய் சாட்டடே நைட் பார்ட்டி கே போகலாம் வர்றியா (ஹேய் பேபி...)

குழு: பூம் பூம் சக்க பூம் பூம் சக்க பூம் பூம் சக்க

பெண்: ஹேய் சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா
ஹேய் சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா

(இசை...)

ஆண்: கடல் கரை எனில் பீச் ஹவுஸ் இருக்கு
பல ஊரினில் ஃபார்ம் ஹவுஸ் இருக்கு
வா ஒன் டே கேர்ள்ப்ரண்ட் ஆக வர்றியா வர்றியா
குளிர் இரவினில் கேம்ப்பைப் போட்டு
சுடச் சுடவென காய்ச்சலே ஊட்டு
வானரங்கள் ஆடிடா போலாம் வர்றியா

பெண்: உல்லாசமாய் உற்சாகமாய் ஒன்றாடிடும் போது
உன் வானத்தில் பல வானவில் தினம் தோன்றுமே
வா வா வா வா வா

குழு: பூம் பூம் சக்க பூம் பூம் சக்க (நீ மர்லின்...)

(இசை...)

பெண்: பெண்கள் ஒரு மிக்ஸ’
குழு: ஓ......

பெண்: வந்தால் ஆண் சட்னி
குழு: ஓ......

பெண்: பெண்கள் ஒரு கிரிக்கெட்
குழு: ஓ......

பெண்: ஆண்கள் தான் விக்கட்

ஆண்: செஸ் போர்ட் ல் குயூனுக்கு செக் வைக்க முடியாது
பெண்தானே பலி ஆகும்... ஓ..
மிஸ் வேர்ல்ட் போல் எங்கும் மிஸ்டர் வேர்ல்ட் கிடையாது
ஆண் ஜென்மம் வீணாகும்... ஓ..
நீ மர்லின் மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர் லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்ப்ரண்ட் ஆக வர்றியா

பெண்: ஹேய் சாட்டடே நைட் பார்ட்டிக்கு போகலாம் வர்றியா

ஆண்: ஹேய் பேபி என் ஆல்பம் நீ
ஹேய் பேபி உன் விஜய் நான்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டிடும் சங்கீதம்
ஹேய் பேபி என் ஆல்பம் நீ
ஹேய் பேபி உன் விஜய் நான்
ஒரு முறை இரு முறை பல முறை கேட்டிடும் சங்கீதம்







Comments :

0 comments to “அழகிய தமிழ் மகன்”


Post a Comment